Posts

Showing posts from April, 2018

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-6

Image
بسم الله الرحمن الرحيم ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-6  (24.04.2018) தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி.  1) சோதனைகளின் போது உறுதியாக இருத்தல்!!           இமாம் மைமூன் பின் அல்அஸ்பbஃ (ரஹ்) கூறுகின்றார்கள்:             ஈராக்கின் பக்தாத் நகரத்தில் நான் இருந்து கொண்டிந்த போது கூச்சல், அலறல் சத்தம் ஒன்றைக் கேட்டேன். “என்ன இது?” என்று நான் கேட்க, “அஹ்மத் இப்னு ஹன்பல் - ரஹ் - அவர்கள், ('அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு அல்ல; அது படைக்கப்பட்டது!' என்ற வழிகெட்ட முஃதஸிலா இயக்கக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி துன்புறுத்தப்பட்டு) சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!”  என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.           உடனே, நானும் உள்ளே சென்று பார்த்தேன். அங்கே இமாம் அஹ்மதுக்கு  சாட்டையால் ஒரு அடி அடிக்கப்பட்டபோது,  “பிஸ்மில்லாஹ்" என்று சொன்னார்கள். இரண்டாவது அடி அடிக்கப்பட்டபோது, “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பிbல்லாஹ்!” என்று ...

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-5

Image
بسم الله الرحمن الرحيم ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-5  (14.04.2018) தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி. 1)நற்காரியங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் மனைவி கிடைத்தவன் பாக்கியசாலியாவான்!             “அறிஞர்களின் அரசன்” (சுல்தானுல் உலமா) எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட இமாம் 'இஸ் இப்னு அப்திஸ்ஸலாம் (ரஹ்)' அவர்கள் டமஸ்கஸ் நகரில் இருந்த போது அங்கே பொருட்களுக்கான கடும் விலையுயர்வு ஏற்பட்டது. இதனால் பெறுமதியான தோட்டங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படும் அளவுக்கும் நிலைமை மாறியிருந்தது.           அந்நேரம், இமாம் இஸ் இப்னு அப்திஸ்ஸலாம் (ரஹ்) அவர்களிடம் அவர்களின் மனைவி தங்கம் ஒன்றைக் கொடுத்து, “கோடை காலத்தில் தங்கியிருந்து இளைப்பாறிக்கொள்வதற்கு எமக்காக தோட்டம் ஒன்றை வாங்குங்கள்!” என்று கூறினார்கள். அவரோ அத்தங்கத்தை எடுத்து, அதை விற்று விட்டு, அதன் பெறுமதிப் பணத்தை தர்மம் செய்து விட்டார்.          அப்போது அவரிடம் அவரின் மனைவி, “கணவரே! எமக்காக வாங்க...

சிரியா போர்: நச்சு வாயு தாக்குதலில் 150 பேர் பலி 1000 பேர் வரை காயம். 08 ஏப்ரல் 2018

Image
சிரியா போர்: நச்சு வாயு தாக்குதலில் 150 பேர் பலி 1000 பேர் வரை காயம். 08 ஏப்ரல் 2018 சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 150 பேர் உயிரிழந்ததாக மீட்புக்குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து ட்வீட் செய்துள்ள தன்னார்வ மீட்பு படையினரான "தி வைட் ஹெல்மட்ஸ்" குழு, கட்டடத்தின் அடிதளத்தில் பல சடலங்கள் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிக்கைகள் இன்னும் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்படவில்லை. ரசாயன தாக்குதல் நடத்தியதாக தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிரிய அரசு, அவை 'ஜோடிக்கப்பட்டவை' என்று தெரிவித்துள்ளது. அறிக்கைகளை கண்காணித்து வரும் அமெரிக்க அரசுத்துறை, தாக்குதல்களில் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், சிரிய அரசுடன் இணைந்து போராடும் ரஷ்யாதான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளது. "இறுதியில், ரசாயன ஆயுத...

Learn Al Qur'an With Tajweed Tamil

Image
بسم الله الرحمن الرحيم Learn Al Qur'an With Tajweed Tamil  அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் : 54:17) 1. குர்ஆனை புரிந்து கொள்வது எளிது - நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32) 2. சிந்திக்கத் தூண்டும் குர்ஆன் - மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?  (அல்குர்ஆன் 47:24) 3. குர்ஆன் விசுவாசிகளுக்கு அருமருந்து - இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம் ஆனால் அக்கிரமக் காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.  (அல்-குர்ஆன் 17:82) 4. குர்ஆன் மனிதர்களின் இதய நோய்நிவாரணி - மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ...

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-4

Image
بسم الله الرحمن الرحيم ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-4  (07.04.2018) தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி. 1)அசத்தியவாதிகளின் ஆக்கங்கள் வெளியே  அழகானவையாக இருக்கும்! உள்ளே விஷம் கலந்திருக்கும்!!             இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:         “அசத்திவாதிகளின் ஆக்கங்களை ஆழமாக நீ சிந்தித்துப் பார்த்தால் அவற்றை அழகிய வார்த்தைப் பிரயோகங்களால் அவர்கள் போர்த்தியிருப்பதை நீ கண்டு கொள்வாய். நல்ல முறையில் அறிந்து, விளங்கிக்கொள்ளும் திறன் இல்லாதவன் அவற்றை அவசரமாகவே ஏற்றுக்கொண்டு விடுவான்.  இவர்களின் கவர்ச்சியான அவ்வார்த்தைகள், அழகிய நிறமும் தோற்றமும் உடைய பாத்திரமொன்றில் வைக்கப்பட்டிருக்கும் நல்ல வாசனைமிகு உணவின் அந்தஸ்தில் இருக்கிறது! ஆனால், அவ்வுணவோ நஞ்சூட்டப்பட்டதாகும்!!” { நூல்: 'முக்தஸர் அஸ்ஸவாயிக்' லிப்னில் கைய்யிம், பக்கம்: 118,119 }                قال العلامة إبن القيم ا...